செவ்வாய், 24 நவம்பர், 2009

உள்ளத்தை அள்ளித்தா ...................

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ‌சமீபத்தில் கனடாவை சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டதும், அந்நிறுவனம் சார்பில் அவருக்கு ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் பரிசளித்ததும் நினைவிருக்கலாம். மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதர் பணிக்காக ரம்பா தனது அண்ணனுடன் கனடா சென்றார். அங்கு மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனின் வீட்டுக்கு சென்ற ரம்பா... குடும்ப உறுப்பினர் ‌போல பழகியிருக்கிறார். இது இந்திரனின் பெற்றோருக்கு பிடித்து விட்டது. 37 வயதாகும் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், அதனை ரம்பாவிடமும், அவரது அண்ணனிடமும் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரம்பாவின் அப்பா, அம்மா மற்றும் அண்ணி கனடா புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். அங்கு கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிகிறது.ரம்பா தற்பாது கனடாவில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. ஆனால் நமது நிருபர் இ-மெயில் மூலம் ரம்பாவிடம் கேட்டதற்கு, கல்யாண பேச்சு நடப்பது உண்மைதான். ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய்கு மேல் வர்த்தகம் புரியும் இளம் தொழிலதிபரான இந்திரன் வீட்டில் என்னை பெண் கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தில் எல்லோருக்குமே இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. கல்யாணம் உறுதியானதும் அனைத்து பத்திரிகைகளுக்கும் முறைப்படி தகவல் தெரிவிப்பேன். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக