சனி, 12 டிசம்பர், 2009
















ரஜினி அவர்களின் பிறந்த நாள் இன்று... அவரின் அரிய புகை படங்கள் இதோ..........

கவிதா ஒரு தனி மரம்

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
மடியிலே குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. கவிதாவுக்கு தூக்கம் வரவில்லை. அவள் தூங்கி பல மாதங்களாகி விட்டது. எங்கேயோ சர்ச் வாசலில் எழுதியிருந்த வாசகம் நினைவுக்கு வந்தது."மனிதன் உலகையே தனதாக்கிக் கொண்டாலும், அவன் ஆன்மாவை இழப்பதால் கிடைக்கும் பயன் என்ன?'வாசகத்துடன் கடந்து வந்த வாழ்க்கையும் நினைவில் சுழன்றது.
கவிதாவின் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலைக்குப் போனால்தான் வீட்டிலே அடுப்பு எரியும். அது வறுமை சுழற்றி அடித்த காலம். கவிதாவுக்கு தெளிவாய்ப் புரிந்தது, படிப்பை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை என்று.வெறியோடு படித்தாள்; வெற்றியும் பெற்றாள். அரசுத் தேர்வு எழுதிய கவிதாவுக்கு அரசுத்துறையில் இளநிலை உதவியாளர் வேலை கிடைத்தது. உழைப்பு, பணியில் காட்டிய நேர்மை என அவளுக்கு சீக்கிரமே துறையில் நல்ல பெயரும், பதவி உயர்வும் கிடைத்தது.
அதே அலுவலகத்தில்தான் வேலை பார்த்தான் முருகன். அவளது திறமையை அருகிலிருந்தே ரசித்த அவன், அவளது முயற்சிகளுக்கும் உதவிகள் செய்தான். பொது மக்களுக்கு நேரடி சேவை செய்ய வேண்டிய அலுவலகம் என்பதால், அங்கே வேலைக்கும், டென்ஷனுக்கும் குறைவே இருக்காது.ஆனால், முருகனும், கவிதாவும் இருந்தால் வேலை சுலபமாய் முடியும். மக்கள் சந்தோஷமாய்த் திரும்புவார்கள். ஒரே மனநிலையில், ஒரே இடத்தில் வேலை பார்த்த இருவருக்கும் இடையே காதல் உருவாக, அதிக நாட்கள் தேவைப்படவில்லை; இரு வீட்டிலும் எதிர்ப்பும் இல்லை.திருமணம் முடிந்தது; சந்தோஷமாய்ப் போனது வாழ்க்கை. அடுத்த ஆண்டிலேயே ஆண் குழந்தையும் பிறக்க, கவிதா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அலுவலகப் பணியில் உயர அடுத்தடுத்து நிறைய தேர்வுகளை எழுதினாள்.
அவளைப் படிக்கச் சொல்லி விட்டு, வீட்டு வேலையையும், ஆபீஸ் வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான் முருகன். நினைத்தது போலவே ஜெயித்தாள் கவிதா. அவள் எழுதிய தேர்வில், வேறு ஒரு துறையில் அதிகாரமுள்ள பதவி கிடைத்தது. எக்கச்சக்க சம்பளம், ஏகப்பட்ட அதிகாரம். தனி வாகனம், தனி பங்களா என வாழ்க்கை முறையே மாறியது. எல்லாம் வந்தபோது, கூடவே ஆணவமும் வந்து சேர்ந்தது. முருகனை எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தாள். வீட்டு வேலை எதையும் செய்வதில்லை என்பதில் திட்டவட்டமாய் இருந்தாள்.
காபி போட்டுக் கொடுப்பதிலிருந்து சமையல் வரை முருகனின் தலையில் போட்டு விட்டு, தினமும் "லேட்டாக' வர ஆரம்பித்தாள். முடிந்தவரை சமைத்து, இல்லாவிட்டால் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொடுத்து, குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி...முழு நேர வேலைக்காரன் ஆனான் முருகன்.இத்தனை செய்தபின்னும், துளியும் மரியாதை இல்லாமல் அவள் பேசியதில் துடித்துப் போனான். குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போனான். அடிக்கடி வெளியூர் சென்று நாள் கணக்கில் கவிதா தங்க ஆரம்பித்ததும், ஊரே ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தது.
கவிதாவின் அலுவலகத்தில் விசாரித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளுக்கும், காண்டிராக்டர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு என்று. அடிக்கடி "கேம்ப்' என்ற பெயரில் ஊட்டி, கொடைக்கானல் சென்று அவனுடன் அவள் தங்குவதும் தெரிந்தது.இதைப் பற்றிக் கேட்ட முருகனை, இஷ்டத்துக்கு திட்டித் தீர்த்தாள் கவிதா. பொறுமையிழந்த முருகன், கவிதாவின் உயரதிகாரியிடம் புகார் செய்தான். அதிகாரியின் முன்னிலையில் விசாரணை நடந்தது. இனிமேல் கணவனுடன் இணக்கமாக வாழ்வதாக கூறிச்சென்றவள், மீண்டும் சண்டை போட்டாள்.
ஒரு நாள் தகராறு முற்றி, குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவள், அடுத்த நாளே தனி வீட்டில் குடியேறினாள். விவாகரத்து கேட்டு, வழக்கும் தொடுத்தாள். குழந்தைக்காக விவாகரத்து தர மறுத்தான் முருகன்.வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக போலீசில் பொய்ப்புகார் கொடுத்தாள். அவளுடைய அதிகாரம் அங்கே வேலையைக் காட்டியது. போலீசார் தினமும் முருகனை ஸ்டேஷனுக்கு அழைத்து, "ஒழுங்கா விவாகரத்து கொடுத்துட்டு போ' என்று மிரட்டினர்.முருகன் மறுத்து வந்தான். அடுத்த முயற்சியாக, தனது செல்வாக்கைப் பயன் படுத்தி முருகனை வெகு தூரத்தக்கு மாற்றல் செய்தாள். குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்த முருகன், கடைசியில் வெறுத்துப் போய் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தான்.
குழந்தையோடு தனியாக வீட்டில் வசித்த கவிதா, அந்த காண்டிராக்டருக்கு "சின்ன வீடு' போலவே மாறிப்போனாள். வாரத்தில் 5 நாட்கள் கவிதாவோடு இருப்பது அந்த காண்டிராக்டரின் மனைவிக்கு தெரிந்தது. காண்டிராக்டரின் மாமனார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்.அவரின் காதுக்கு விஷயம் எட்டியவுடன், ஆயிரம் "வோல்டேஜ் கரண்ட்' அப்படியே கவிதா மீது பாய்ந்தது. அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டத்தில் அதிகாரம் இல்லாத "டம்மி போஸ்டிங்' க்கு தூக்கி அடிக்கப்பட்டாள் கவிதா.
யார் யாரையோ பிடித்தும் காரியம் கைகூடவில்லை. வேறு வழியே இல்லாமல் மாற்றல் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றாள் கவிதா. மாமனார் மிரட்டிய மிரட்டலில் நடுநடுங்கிப் போன காண்டிராக்டர், இப்போதெல்லாம் கவிதா போன் செய்தாலும் எடுப்பதில்லை. நேரடியாகப் பார்க்கப்போன போதும், அவளைப் பார்க்கவே இல்லை. ஒட்டு மொத்தமாய் உடைந்து போனாள் கவிதா. அப்போதுதான் முருகனின் காதல் மனது, அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்காக இல்லாவிட்டாலும், தனது குழந்தைக்காக தன்னை ஏற்றுக் கொள்வான் என்று அவனைத் தேடிப் போனாள்.
கஷ்டப்பட்டு, அவனது விலாசத்தைத் தேடி வீட்டுக்குப் போன போது, அங்கே முருகனுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். கஷ்டப்படும் ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, புது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தான் முருகன். இப்போது கவிதா ஒரு தனி மரம்.

சனி, 5 டிசம்பர், 2009


கமல்ஹாசன் வெளியிட்ட உயிர், உறவு, உண்மை

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அலைகள் மீடியா, பீப்பிள் எய்ட்ஸ் இனிஷியேட்டிவ், ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகியவை இணைந்து 3 எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்துள்ளன. உயிர், உறவு, உண்மை ஆகிய பெயர்களில் உருவான இந்த குறும்படங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு குறும்படங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், நடிகர்கள் நரேன், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து ‌கொண்டனர். உயிர் குறும்படத்தை கிருத்திகா உதயநிதியும், உறவு குறும்படத்தை சசிக்குமாரும், உண்மை குறும்படத்தை மிஷ்கினும் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_மதுக்கூர் தமிழரசன்

திங்கள், 30 நவம்பர், 2009

2012




என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!
>> 11/16/09
#fullpost{display:none;}
ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.
சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆனால் 2012க்குப் பிறகு? அது பற்றி எந்தக் குறிப்புகளும் மாயன் நாகரீக ஆதாரங்களில் இல்லையாம். ஆக 2012-ஐ பூமியின் எக்ஸ்பயரி டேட் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று இயக்குநர் யோசித்ததன் விளைவுதான் இந்த 2012 திரைப்படம் எனலாம் .உலகத்தின் முடிவு 2012 ம் ஆண்டு நிகழ்வதை சித்தரிப்பதே இந்த 2012 திரைப்படம். உலகின் அரசாங்கங்கள் அனைத்தும் தயாராகாத நிலையில் மாயன் கலெண்டர் முடிவடையும் 2012 பல இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக இடம் பெற்று உலகை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே படத்தின் கதை.
2010 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் புரட்டோகனிஸ்ட்டும் ஆன சட்னம் பூமியின் மைய வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பைக் கண்டு பிடிக்கிறார். படத்தின் கதாநாயகனாக வரும் விஞ்ஞானியும் சட்னத்தின் நெருங்கிய நண்பருமான அட்றியன் ஹெல்ம்ஸ்லி இதை அமெரிக்காவின் அப்போதைய அதிபராக விளங்கும் தோமஸ் வில்சனின் கண்ணோட்டத்திற்கு இச்செய்தியைக் கொண்டு வருகின்றார்.இதன் பின்னர் கதை 2012ம் வருடத்திற்கு நகருகின்றது. 'யெல்லோவ்ஸ்டோன்' எனப்படும்
உலகின் மிக அபாயகரமான எரிமலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயன்களின் உலக அழிவுப் பிரகடனத்தை அறிவுப்புச் செய்யும் சார்லி ப்ரொஸ்ட்டை சந்திக்க செல்கிறார் அட்றியன். இதேநேரம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
மிகவும் மோசமான நில அதிர்வுகளால் பாதிக்கப்படும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் முழுவதும் பசுபிக் சமுத்திரத்தில் மூழ்கி விடுகின்றது. இச்சமயத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலுள்ள அட்றியனின் மக்கள் நகரம் அழியும் போது தப்பி செல்லும் காட்சி மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்த வல்லதாய் அமைந்துள்ளது.
உலகின் மற்ற பாகங்களான இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டு கடலோரப் பிரதேசங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டு விடுகிறது.இதேவேளை இத்தாலியின் வத்திக்கான் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு அழிந்து விடுவதுடன் பாப்பரசரும் இறந்து விடுகிறார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாசிங்டன் மிகப்பெரிய சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டால் என்ன நிகழும்? என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய நகரங்கள் அத்தனையும் இடிந்து தரைமட்டம் ஆவது போலவும், உலகிலேயே உயரமான இமயமலையையே சுனாமி விழுங்குவது போலவும்
யெல்லோஸ்டோன் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சியும் லாஸ் வெகாஸ் நகரம் அதனால் அழிவுறும் காட்சிகள் ரூ 1200 கோடி செலவில் அற்புதமான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திகிலுக்கு மத்தியில், பூமியில் தொடர்ச்சியாக ஏற்படும் இவ்வனர்த்தங்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சீனாவை நோக்கி பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் படத்தின் கதாநாயகன் அட்றியன் ஹெல்ம்ஸ்லி பயணித்து கப்பல்கள் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார் , ஒரு குடும்பம் விமானத்தில் தப்பி செல்கிறது. உலகம் அழிந்தபின், அவர்கள் நிலை என்ன? . என்பதே படத்தின் மீதிக்கதை.
மனித இனத்தின் முதல் கலாச்சாரமான மாயன் பூர்வீகக்குடிகள் மனிதர்களின் அழிவை முன்னமே எவ்வாறு கட்டியம் கூறியிருந்தார்கள் என்பதையும் இயற்கை அனர்த்தங்கள் மனித அழிவை எவ்வாறு நிர்ணயிக்கின்றன என்பதையும் சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸுடன் கண்ணுக்கு விருந்தாகப் படைக்கும் 2012 நிச்சயம் தவற விடக்கூடாத படங்களில் ஒன்று. உலக சினிமா சரித்திரம் பார்த்திராத கிராபிக்ஸ் அற்புதம் எனும் வகையில் உலகம் அழியும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். முன்னோட்டக் காட்சிகள் முடிந்த பின்னும் படம் குறித்த பிரமிப்பு நீங்காமலேயே பலரும் அரங்கை வி்ட்டு வெளியேறினர்.வேற்றுக்கிரக வாசிகள் பூமியைத் தாக்குவதை வெளிப்படுத்தும் 'இண்டிபெண்டென்ஸ் டே', மற்றும் உலக அழிவை சித்தரிக்கும் இன்னொரு படைப்பான 'டே ஆஃப்டர் டுமாரோவ்' ஆகிய பிரசித்தமான படங்களை தந்த டைரக்டர் ரோலண்ட் எம்மெரிச்சின் கைவண்ணத்தில் உருவான 2012 நவம்பர் 13ம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. அசத்தலான கம்யூட்டர் கிராஃபிக்ஸுடன் தயாராகியுள்ள என்ட் ஆப் வேர்ல்ட் 2012 என்ற இந்த ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் 65 மில்லியன் டாலரும் உலகளவில் 225 மில்லியன் டாலரும் வசூலாகி சாதனை படைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது

செவ்வாய், 24 நவம்பர், 2009

உள்ளத்தை அள்ளித்தா ...................

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ‌சமீபத்தில் கனடாவை சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டதும், அந்நிறுவனம் சார்பில் அவருக்கு ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் பரிசளித்ததும் நினைவிருக்கலாம். மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதர் பணிக்காக ரம்பா தனது அண்ணனுடன் கனடா சென்றார். அங்கு மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனின் வீட்டுக்கு சென்ற ரம்பா... குடும்ப உறுப்பினர் ‌போல பழகியிருக்கிறார். இது இந்திரனின் பெற்றோருக்கு பிடித்து விட்டது. 37 வயதாகும் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், அதனை ரம்பாவிடமும், அவரது அண்ணனிடமும் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரம்பாவின் அப்பா, அம்மா மற்றும் அண்ணி கனடா புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். அங்கு கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிகிறது.ரம்பா தற்பாது கனடாவில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. ஆனால் நமது நிருபர் இ-மெயில் மூலம் ரம்பாவிடம் கேட்டதற்கு, கல்யாண பேச்சு நடப்பது உண்மைதான். ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய்கு மேல் வர்த்தகம் புரியும் இளம் தொழிலதிபரான இந்திரன் வீட்டில் என்னை பெண் கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தில் எல்லோருக்குமே இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. கல்யாணம் உறுதியானதும் அனைத்து பத்திரிகைகளுக்கும் முறைப்படி தகவல் தெரிவிப்பேன். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

சில்லி சிக்கன் தோசை














தேவையான பொருட்கள்



Image



சிக்கன் - 3துண்டு



இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி



சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு



தயிர்- 1 தேக்கரண்டி



எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி



உப்பு தேவையான அளவு Image



தோசை மாவு- 2 கப்



வெங்காயம்- 2



பச்சை மிளகாய்- 3



கொத்தமல்லி தழை-2 கொத்து



எண்ணை தேவைக்கேற்ப்ப



வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்



அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்



Image



ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்



அதனை பொடியாக நறுக்கிவைக்கவும்



Image



,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்



Image



உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்



Image



.



அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்Image



நன்கு அமுக்கி விடவும்Image







தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்



Image



தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும் Image



சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்

ELLAME SIRIPPUTHAN (2)

பேருந்து நகைச்சுவைகள்....




ஒரு கூட்டமான பேருந்தில் ராமு கஷ்டப்பட்டு ஏற முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் கூட்டம் அவனை உள்ளே விட வில்லை.

ராமு சத்தமாக கத்தினான் "என்னை ஏற விடுங்கள்"

கூட்டத்தில் ஒருவர்: "பேருந்தில் இடம் இல்லை, ஏற முடியாது, அடுத்த பஸ்சில் வா"

ராமு: "இல்லை நான் இந்த பஸ்சில் தான் வந்தாக வேண்டும், நீங்கள் என்னை ஏற்றித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் இந்த பஸ் ஒரு அடி கூட நகராது"

கூட்டத்தில் ஒருவர்: " நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா"

ராமு: "இல்லை நான்தான் இந்த பஸ்ஸின் டிரைவர்"



*******



> ஒரு ரூபாயை வைத்து ஒரு முட்டாளை எப்படி கொள்ள முடியும்.

>> அந்த ஒரு ரூபாயை பஸ் டயரின் முன்னால் வீசி...



******

கடலை கடந்த பஸ் எது?

கொலம்பஸ்

******



ஹோட்டல்ல காசு இல்லன்னா மாவு ஆட்ட சொல்லுவாங்க,

பஸ்ல காசு இல்லன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?



*****



பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும், ஆனா

புல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ண புல்(full) வருமா? கோட்டர் கூட வராது.



******

பஸ் ல நீங்க ஏறுனாலும், பஸ் உங்க மேல ஏறுனாலும்

டிக்கெட் வாங்குறது நீங்கதா.



*****



ஒரு விடுகதை:

தகர பெட்டிக்குள் மோகினி பிசாசுகள் அது என்ன?



லேடிஸ் காலேஜ் பஸ்..



*****



பஸ் ல கண்டக்டர் தூங்குனா யாருக்கும் டிக்கெட் கிடைக்காது,

டிரைவர் தூங்குனா எல்லாருக்குமே டிக்கெட் தான்..



*****



மகன்: அம்மா, இன்னைக்கு பஸ்ல அப்பா என்னை எந்திரிக்க சொல்லிட்டு ஒரு ஆண்ட்டிய உக்கார வச்சுட்டாரு..

அம்மா: அதனால என்னடா பரவாயில்லை..

மகன்: நான் உக்காந்துட்டு இருந்தது அவர் மடில.



*******



கண்டக்டர்: படில நிக்காதப்பா, உள்ளதா கடல் மாதிரி இடம் இருக்கே.. உள்ள வா.

மாணவன்: எனக்கு நீச்சல் தெரியாது, அதுதா கரைலேயே நிக்கற.

ELLAME SIRIPPUTHAN

நகைச்சுவை - இரசித்தவை




==========================



ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்

எவ்வளவு?





கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.





ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி

கூட்டினாலும் வராதேடா?





கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்

சார்!!!





#######################################





தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட

கண்ணாடியக் காணோம்; கண்ணு

தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்

தேடி எடுத்துக் கொடுடா.





கோபால்: போ தாத்தா, எனக்கு

வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்

போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!





தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு

விழாவில்) : பள்ளிக்கு தினமும்

லேட்டா வந்தாலும், முன் சொன்ன

காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்

தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்

சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த

சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.





!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####











இதோ இன்னொரு லேட்டா வர்ற ஜோக்;



ஒரு அலுவலகத்துல இருந்த லேட் ரிஜிஸ்டரை பாத்துட்டிருந்த

மேலதிகாரி, லேட்டா வந்த எல்லாரையும் அழைத்து

“எப்போ ட்ரீட் வைக்கப்போறீங்க?”ன்னு கேட்டாராம்.



எல்லாரும் எதுக்குன்னு தெரியாம முழிக்க, அந்த லேட்

ரிஜிஸ்டரைக் காட்டினாரு.



அதுல முதல் ஆள் `என் மனைவிக்கு அதிகாலை ஆண்மகன்

பிறந்தான். மருத்துவமனையிலிருந்து வர தாமதமாகிவிட்டது’ ன்னு

எழுதியிருந்தாரு.



லேட்டா வந்த எல்லாருமே அதுக்கு டிட்டோ போட்டிருந்தாங்களாம்!

dia

சுய கட்டுப்பாடு இருப்பின் நீரிழிவு நோயைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை

=================================================



இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.



நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.



வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும். முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.



நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.



முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும்.



சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.



குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்; போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.



சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.



1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.

2 அடிக்கடி தாகம் ஏற்படல்.

3. அசாதாரண பசி ஏற்படல்.

4. உடல் சோர்வாக இருத்தல்.

5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.

6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.

7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.

8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.

9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.

10. கண் பார்வை குறைவடைதல்.

11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.

12. எளிதில் கோபமடைதல்.



மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.



பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.



முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.



இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.



அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.



உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.



பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.



நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.



நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.



2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.